
மணிமங்கலத்தில் பாலியல் தொழில் நடத்திய 2 பேர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் அருகே மணிமங்கலம் அடுத்த வரதராஜபுரம் மகாலட்சுமி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மணிமங்கலம் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு மூன்று பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த அம்பத்துாரைச் சேர்ந்த பிரசாந்த் (32) மற்றும் சபரிஷ் (23) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட மூன்று பெண்களும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.






































