கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த, பனையூர் தவெக அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரிகள் இன்று (நவ.3) வருகை தந்துள்ளனர். பரப்புரை வாகனத்தை ஆய்வு செய்து, அதில் உள்ள சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆவணங்களை சேகரித்து செல்வதற்காக வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திடீர் வருகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.