செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளியில் இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கை மட்டும் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் முனுசாமி தலைமையில் பள்ளியில் பள்ளி மாணவர், மாணவிகள் இயற்கை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர் மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பள்ளியைச் சுற்றி நிழல் தரும் மரங்களையும், பழங்கள் கொடுக்கக்கூடிய மரங்களையும் இப்பள்ளி வளாகத்தில் சுற்றுச்சூழல் தினத்தில் நடப்பட்டது. பள்ளி மாணவர் மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.