பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரைச் சேர்ந்த ஷோபியா அல்போன்சா மேரி (32) என்பவர், நேற்று முன்தினம் மாலை தேவகோட்டை செல்வதற்காக பொழிச்சலூரில் இருந்து குரோம்பேட்டைக்கும், பின்னர் அங்கிருந்து தாம்பரத்திற்கும் மாநகர பேருந்துகளில் வந்துள்ளார். தாம்பரம் பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, அவரது பேக்கில் இருந்த 5 சவரன் செயின் மற்றும் 3 சவரன் வளையல் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து அவர் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.