தென்மாவட்டங்களுக்கு செல்லும் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் நேற்று (மே. 18) நள்ளிரவு தென்மாவட்டத்திற்கு செல்ல பயணி ஒருவர் வந்துள்ளார். அப்போது அவரிடம் ஆம்னி பேருந்து டிரைவர் அதிக கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது, இந்நிலையில் வழக்கமான நாளில் ஏன் அதிக கட்டணம் கேட்கிறீர்கள் என்று பயணி கூற, இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஒருவொருக்கொருவர் சட்டையை கிழித்துக் கொண்டு சண்டையிட்டனர். இதனால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.