மின் மாற்றியில் ஏறிய நபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

1பார்த்தது
மின் மாற்றியில் ஏறிய நபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு கிராமத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட வீரபத்திரன் (37) என்பவர் மின்மாற்றியில் ஏறி கம்பியைப் பிடித்து தொங்கியபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். நேற்று மதியம் 1:45 மணியளவில் கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கூடுவாஞ்சேரி போலீசார், மின்வாரிய ஊழியர்களின் உதவியுடன் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்தவர் நந்திவரம் பகுதியைச் சேர்ந்தவர்.

தொடர்புடைய செய்தி