முதல் பெண் காவலர் என்ற பெருமையுடைய சிசிலி உடலுக்கு அஞ்சலி

தமிழகத்தின் முதல் பெண் காவலர் என்ற பெருமைக்குரிய சிசிலி (82) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். 1977ல் தமிழகத்தின் 2வது பெண் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த இவர், 2005ல் நீலாங்கரை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். காவல்துறையில் சிறப்பான சேவைக்காக ஏராளமான பதக்கங்கள், பாராட்டுகள் மற்றும் விருதுகளைப் பெற்றவர். அவரது உடல் இன்று (மே 21) பாலவாக்கம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
