காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகே சிறுமாங்காடு, சலையனுார் கிராமங்களில் வளர்க்கப்படும் மாடுகள், இரவு நேரங்களில் சிப்காட் சாலையில் படுத்து ஓய்வெடுக்கும் பழக்கம் உடையவை. நேற்று அதிகாலை, 'பாக்ஸ்கான்' தனியார் தொழிற்சாலையின் பேருந்து அதிவேகமாக வந்து, சாலையில் படுத்திருந்த மாடுகள் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே எட்டு மாடுகள் உயிரிழந்தன.