காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேடபாளையம், மருத்துவன்பாடி, மருதம், சித்தமல்லி, கடல் மங்கலம், தோட்டனாவூர் போன்ற கிராமங்களில் விவசாயிகள் தை மாசி பட்டத்தில் நெற்பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். சுற்றுலாத்தலமான வேடந்தாங்கலுக்கு வரும் கருங்கோக்கு, வெண்கொக்கு போன்ற பறவைகள் நெற்பயிர்களில் அமர்ந்து இரை தேடுவதால் பயிர்கள் சேதமடைந்து, மகசூல் குறைய வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.