கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மலைப்பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், புத்தேரி பாலம் அருகே நேற்று இரவு ஒரு மலைப்பாம்பு சாலையைக் கடந்து குளத்திற்குச் சென்றது. இதைக் கண்ட பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.