கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியில் நாகராஜன் என்பவர் தனது வீட்டைச் சுற்றி விலங்குகள் வராமல் இருக்க வலை அமைத்திருந்தார். நேற்று இந்த வலையில் ஒரு மரநாய் சிக்கித் தவித்தது. இதைக் கண்ட நாகராஜன் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த வனத்துறையினர் மரநாயைப் பிடித்துச் சென்றனர்.