கன்னியாகுமரி மாவட்டம் அருமல்லூர் பகுதியில் இருந்து தடிக்காரன் கோணம் செல்ல பழையாற்றில் இருந்த கம்பி பாலம் இடிக்கப்பட்டு பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதை அமைக்கப்பட்டது. அண்மையில் பெய்த கனமழையில் இந்த பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் சாலை வசதி இல்லாததால் 12 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.