தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம், கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக் குளம் சாலையில் ராட்சத பாம்பு செல்வதாக சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி தவறானது என விளக்கம் அளித்துள்ளது. இந்தக் காணொளி தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல என்றும், இது கடந்த 2022 ஆம் ஆண்டு கேரள மாநிலம் வயநாட்டில் எடுக்கப்பட்ட காணொளி என்றும், இதை கன்னியாகுமரி என திரித்து வதந்தி பரப்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தவறான தகவலை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.