கன்னியாகுமரி மாவட்ட கிழக்கு கடலோர பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு மீனவர்கள் இழுவலை, விசைப்படகுகள் அல்லது தூண்டில், வழிவலை விசைப்படகினை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மீன்பிடி தடைகாலத்தில், கிழக்கு கடலோர பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். இந்த தடைக்காலம், கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் அமல்படுத்தப்படுகிறது.