கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைக்குளம் பகுதியில் நேற்று இரவு, ஒரு ராட்சத மலைப்பாம்பு குளத்தை கடந்து மறுகரைக்கு சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் பாம்பு மறுகரை செல்லும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.