கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே பொன்னார் விளையைச் சேர்ந்த பிரதீபா (27) நேற்று வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது அவரது தாலிச் சங்கிலியை மர்ம நபர் திருடிச் சென்றார். பக்கத்து வீட்டுக்காரர்கள் வேல்முருகனைப் பிடித்து விசாரித்தபோது அவர் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை போலீசில் ஒப்படைத்த நிலையில், போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.