கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக எஸ்.பி. ஸ்டாலினுக்கு கிடைத்த தகவலின் பேரில், நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் மதன் மற்றும் அழகர்சாமி ஆகியோர் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் பிடிபட்டனர். அவர்களை குமரி போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.