நாகர்கோவிலில் உள்ள திமுக தலைமை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து ரீல்ஸ் வீடியோ எடுத்ததாக விஜய் (26) என்ற வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் ஏற்கனவே பிரதமர் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களை விமர்சித்து ரீல்ஸ் வெளியிட்ட வழக்குகளில் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.