குமரி கலை விழாவை தொடங்கி வைத்த அமைச்சர்
கன்னியாகுமரியில் சுற்றுலாத் துறை சார்பில் குமரி கலை விழா நேற்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார். விழாவில் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.