கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் பரவலாக சாரல் மழை பெய்தது, குறிப்பாக சுசீந்திரம், அஞ்சுகிராமம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்துள்ளது. மே மாத வெப்பத்தால் தவித்த மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை அளித்துள்ளது. மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.