கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நிலவி வந்த வறண்ட வானிலை மற்றும் அதிக வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள தடிக்காரன் கோணம், சுருளோடு, எட்டாமடை கேசவன் புதூர், கீரிப்பாறை, காளிகேசம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் தணிந்து மக்கள் நிம்மதி அடைந்தனர்.