சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள பேருந்து நிலையத்தின் பிரதான நுழைவாயில் சங்கிலி போட்டு மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. குறிப்பாக பெண்கள், முதியோர்கள் மற்றும் அதிக லக்கேஜ்களுடன் வரும் சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நுழைவாயில் சங்கிலியை உடனடியாக அகற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.