குமரி மாவட்டத்தில் உளுந்து சாகுபடி செய்த விவசாயிகளின் நலன் கருதி, அவர்கள் விளைவித்த உளுந்தை குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு 70 டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிலோ ஒன்றுக்கு 78 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.