கன்னியாகுமரி மாவட்டம் புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளத்தை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ஆழமாக மண் எடுப்பதாலும் தொடர் மழையாலும் மதில் சுவர்கள் வலுவிழந்து இன்று காலை இடிந்து விழுந்தன. இதனால் பக்தர்கள் மத்தியில் பதட்டம் நிலவுகிறது. அதிகாரிகள் பார்வையிட்டு, போக்குவரத்து தடை விதித்துள்ளனர். உடனடி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.