கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் இருந்து செண்பகராமன் புதூருக்குச் செல்லும் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமடைந்து, வாகனங்கள் செல்ல முடியாத நிலைக்குச் சென்றுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, இந்தச் சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.