மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 685 மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. குழித்துறை நகராட்சி தலைவர் பொன். ஆசைத்தம்பி கலந்துகொண்டு லேப்டாப்புகளை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் பிஜு தலைமை தாங்கினார். இந்த கல்லூரியில் ஏற்கனவே முதற்கட்டமாக 690 மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.