நித்திரவிளை சந்தை வாசலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த 'உங்க கனவை சொல்லுங்க' திட்டம் குறித்த பேனரை ஆலஞ்சோலை பகுதியை சேர்ந்த கணேசன் (54) கிழித்துள்ளார். பொதுமக்கள் அவரை பிடித்து கொல்லங்கோடு நகராட்சி ஆணையரிடம் தகவல் தெரிவித்தனர். புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் கணேசனை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.