இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு CPI குமரி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமை வகித்தார். நாகராஜன் உட்பட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.