ராமன்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் சுஜின் (35), கேத்ரின் பிளஸ்சி (23) என்ற பெண்ணைக் காதலித்து 2023-ல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்தை மறைத்து இருவரும் தனித்தனியாக வசித்தனர். சுஜின் மீண்டும் கத்தார் சென்ற நிலையில், பிளஸ்சி கடந்த 2 ஆண்டுகளில் அவரிடம் ரூ. 12 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால், அவருடன் சேர்ந்து வாழ பிளஸ்சி சம்மதிக்கவில்லை. இதனால் மனமுடைந்த சுஜின், திருமண மோசடி செய்ததாக குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் புதுக்கடை போலீசார் கேத்ரின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.