இரணியல் அருகே விவாகரத்து பெற்று தனிமையில் வசித்து வந்த நந்தினி என்ற இளம் பெண், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பணம், நகையை வாங்கிவிட்டு தன்னை வீட்டை விட்டு துரத்தியதாக தனது இரண்டாவது கணவர் சுரேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கைக்குழந்தையுடன் குமரி காவல் கண்காணிப்பாளரை சந்தித்து நேற்று புகார் அளித்தார். இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.