ஈத்தாமொழி அருகே தேரிமேல் விளையைச் சேர்ந்த அதிமுக ஒன்றிய செயலாளரான வீராசாமியின் வீட்டிற்குள் நேற்று இரவு ஒரு நல்ல பாம்பு புகுந்தது. இதைக்கண்ட அவரது வீட்டில் வளர்க்கப்படும் இரண்டு நாய்கள், பாம்பை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து, நீண்ட நேரம் போராடி கடித்து குதறி கொன்றன. இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.