மண்டைக்காடு: ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் விழா துவக்கம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் சபரிமலை எனப் போற்றப்படும் மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோவிலில் மாசி கொடைவிழா இன்று, மார்ச் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதியரசர் விக்டோரியா கெளரி, விஜய் வசந்த் எம்பி, பிரின்ஸ் எம்எல்ஏ, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார், திருக்கோயில் இணை ஆணையர் ஜான்சிராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இந்த விழா தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறும்.