கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறையினர் பட்டகசாலியன்விளை பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, வடசேரியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஜனவரி மாதம் முதல் மொத்தம் 19 சிறார்களின் பெற்றோர்கள் மீது வாகனம் ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.