கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோதை கிராமத்தைச் சேர்ந்த 33 வயது பெண், கூலி வேலை செய்து வந்துள்ளார். திருமணம் ஆகாத ஏக்கத்தில் இருந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று (ஜன. 10) காலை அவரது பெற்றோர் இதைப் பார்த்தபோது, போலீசாருக்கு தகவல் அளித்தனர். கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.