கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள இசக்கியம்மன் கோயிலின் முன்பு இருந்த மாடசாமி சிலை நேற்று இரவு மர்ம நபரால் உடைத்து சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிலையை உடைத்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.