தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாகர்கோவில் 24-வது வார்டு பகுதிகளில் மேயர் மேரி பிரின்சி லதா இன்று (மே. 25) நேரில் ஆய்வு நடத்தினார். ஆசாரிமார் தெற்கு தெரு மற்றும் புத்த பங்களா பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால் ஓடைகளை பார்வையிட்ட அவர், அவற்றை உடனடியாகத் தூர்வாரி சுத்தம் செய்ய அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.