கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காவலர்களுக்கு முதலுதவி பயிற்சிக்கான சிறப்பு முகாம் இன்று (பிப்ரவரி 4) நடைபெற்றது.
இந்த முகாமில் விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள், மயக்க நிலையில் உள்ளவர்களை எவ்வாறு மீட்டு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.