நாகர்கோவில்: பெண் தற்கொலை செய்த விவகாரம்; கணவர் கைது.

4பார்த்தது
நாகர்கோவில்: பெண் தற்கொலை செய்த விவகாரம்; கணவர் கைது.
நாகர்கோவில் கீழமறவன் குடியிருப்பைச் சேர்ந்த செல்வசரண், ராஜபாளையத்தைச் சேர்ந்த ரேஷ்மா (20) என்பவரை 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார். இருவருக்கும் இடையே அடிக்கடி ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக, சம்பவத்தன்றும் வாக்குவாதம் முற்றியது. இதனால் மனமுடைந்த ரேஷ்மா, கணவருடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தாயாருக்கு குரல் பதிவு மூலம் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் செல்வசரண் கைது செய்யப்பட்டு, நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி