கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்திசித்தர் சக்திபீடத்தில் ஆனி மாத 3-வது சனிக்கிழமையான இன்று (ஜூலை. 5) சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு எண்ணெய், பால், மஞ்சள் பொடி, களபம், சந்தனம், குங்குமம், பன்னீர், இளநீர் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பிறகு பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.