நாகர்கோவில் அருகே ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த அரக்கோணத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர். அவரிடம் இருந்து பல பெண்களின் ஆபாச படங்கள், வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. இவர் இளம் பெண்களை வரவழைத்து ஏமாற்றி, அவர்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட பிரபாகரனை காவலில் எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.