தெற்கு சூரங்குடி பகுதியைச் சேர்ந்த ஜெப செல்வி (49) நேற்று வேலைக்குச் சென்றபோது, அவரது வீட்டின் கதவை உடைத்து, விலை உயர்ந்த ஸ்மார்ட் கைக்கடிகாரம் திருடப்பட்டுள்ளது. இது குறித்து அவர் ஈத்தாமொழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைரேகைகளைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.