நேற்று கழுவன்திட்டை பகுதியில் கனரா வங்கி கிளார்க் ஆரதி ஜோஸ்(37) என்பவர் பைக்கில் சென்றபோது, அதிவேகமாக வந்த விவேக்(28) ஓட்டி வந்த பைக் மோதி அவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்ற தேவராஜ்(71) என்பவரும் படுகாயம் அடைந்தார். இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.