களியக்காவிளை, வன்னியூர் பகுதியைச் சேர்ந்த 28 வயது பொறியியல் பட்டதாரி அபிஸ், இளைஞர் காங்கிரசின் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக இருந்து வந்தார். காதலி பேசியதை நிறுத்தியதால் மனமுடைந்த அபிஸ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் உடலைக் கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.