குமரி மாவட்டம் நாகர்கோவிலில், குப்பைகளை சேகரித்து யாசகம் செய்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவரை, குமரி போலீசின் ‘நிமிர்’ மீட்புக் குழுவினர் மீட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். இவர் பல ஆண்டுகளாக சேகரித்த குப்பைகளில் ₹10, ₹50, ₹100 நோட்டுகள் மற்றும் அதிகளவிலான சில்லறைப் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மீட்புப் பணி நேற்று நடைபெற்றது.