முளங்குழி பகுதியைச் சேர்ந்த 16 வயது பிளஸ் 1 மாணவர் அஜித், நண்பருடன் உடற்பயிற்சி செய்ய மோட்டார் சைக்கிளில் சென்றபோது, நட்டாலம் நான்கு வழிச்சாலை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி படுகாயமடைந்தார். திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அஜித், நேற்று மாலை உயிரிழந்தார். மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.