மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி பைக்கில் சென்ற ஜெய்சிங் (37) மீது எதிரே வந்த கேரள அரசு பஸ் மோதியதில் அவர் காயமடைந்தார். கல்லுதொட்டி அருகே நடந்த இந்த விபத்தில், ஜெய்சிங் தூக்கி வீசப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில், கேரள அரசு பஸ் ஓட்டுநர் ஹரிலால் (45) மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.