பளுகல் அருகே தேவிகோடு பகுதியைச் சேர்ந்த ஜிபின் ராஜ் (28) என்ற கொத்தனார், கடந்த 5ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதுகுறித்து பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.