கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் உடலுக்கு இரவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் எந்த தவறும் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறப்பு அனுமதி பெற்று இரவில் உடற்கூறாய்வு நடைபெறுவது வழக்கம்தான் என உடற்கூறாய்வு இரவில் நடந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மனுதாரர் கூறிய நிலையில் நீதிபதி விளக்கம் அளித்துள்ளார். கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என தமிழக அரசு வாதம் வைத்தது.