கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்துமாறு சென்ைன உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் சிபிஐ விசாரணை கோரியும் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. அதன்படி சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.