கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்கா கொக்காட் பட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (44) என்பவர் நேற்று நாகம்பள்ளி பிரிவு ரோடு அருகே தனது ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த ஜோதி தாமஸ் ஆபிரகாம் ஓட்டி வந்த கார் மோதியதில் படுகாயமடைந்துள்ளார். அவர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புகார் அளித்துள்ளார். அரவக்குறிச்சி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.